16
March, 2026

A News 365Times Venture

16
Monday
March, 2026

A News 365Times Venture

அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: `மாதபி மீது எந்தத் தவறும் இல்லை' – லோக்பால் தீர்ப்பு

Date:

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தப் போது அதானி பெயர் அடிப்பட்ட அதே அளவுக்கு, முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச் பெயரும் அடிப்பட்டது.

மதாபி பூரி புச்சும், அவரது கணவர் தவால் புச்சும் தங்களது சொந்த லாபத்திற்காக அதானி குழுமத்திற்கு உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், செபி தலைவராக அவருக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து தான் முதலீடுகள் வாங்குவது, விற்பது மூலம் லாபம் பார்த்தார் என்றும் கூறப்பட்டது.

இதையொட்டி, இவர் மீது எழுந்த புகாரை லோக்பால் அமைப்பு விசாரணை செய்தது. லோக்பால் என்பது ஊழல் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் ஒரு அமைப்பு ஆகும்.

லோக்பால்

லோக்பால் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

“மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சின் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனுமானங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது. இதை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதனால், இந்தக் குற்றசாட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் சாட்டிய குற்றத்தில் இருந்து மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவரின் பெயர் நீக்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகிலுள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர். பெயிண்டரான...

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்' – அமெரிக்க USCIRF அறிக்கை; காங்கிரஸ் விமர்சனமும் அரசின் பதிலும்!

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF), ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும்...

பேராவூரணி தொகுதியை கூட்டணிக்கு தரமாட்டார் எடப்பாடி! – அதிமுக வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பேராவூரணி. கடமைடை...