21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

வேலூர்: கனமழையில் சேதமடைந்து சாய்ந்த மின் கம்பம்; அச்சப்படும் பொதுமக்கள்.. கவனிப்பார்களா அதிகாரிகள்?

Date:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்திருக்கிறது மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருக்கும் மின்கம்பம் சேதம் அடைந்து, கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலையில் இருப்பதனால், இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே, இந்த சாலையில் பயணிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகலில் வெயிலும், இரவில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் மேலரசம்பட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் சில மரங்கள் சாய்ந்தன. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் மின்வெட்டும் ஏற்பட்டு உள்ளது. 

இது குறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி பொது மக்கள், “நேற்று பெய்த கனமழை காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் உள்ள மின் கம்பம் சேதம் அடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. சாலையில் செல்லும் பொழுது இந்த மின் கம்பம் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் பயணிக்க வேண்டியதாக உள்ளது. இது குறித்து மின் வாரிய அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பொது மக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பே, சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த மின் கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.” என்று கூறினர்.

இது குறித்து ஒடுகத்தூர் மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மேலரசம்பட்டில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பம் குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்துள்ளது. சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' – மதூர் சத்யா சிக்கியது எப்படி?

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின்...

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி...

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து...

"நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி" – கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில்...