10
March, 2026

A News 365Times Venture

10
Tuesday
March, 2026

A News 365Times Venture

வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு 'மன்னிப்பு' – ஈரான் அதிபர்; ஆனால், இன்னமும் தாக்குதலை தொடர்கிறது- ஏன்?

Date:

ஈரான் போர் தொடங்கி ஒரு வாரம் தாண்டிவிட்டது.

ஆனால், இன்னமும் வளைகுடா நாடுகளில் வெடிகுண்டு சத்தங்களும், ஏவுகணை பாய்ச்சல்களும் குறைந்ததாக இல்லை.

நேற்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு மன்னிப்பு கேட்டார்… இனி அந்த நாடுகள் எங்களை தாக்கினாலே தவிர, நாங்களாக அவர்களைத் தாக்கமாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

இருந்தும், இப்போது வரை வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி கொண்டே தான் இருக்கிறது.

அதிபர் பெஷேஷ்கியன் | Masoud Pezeshkian

காரணம் என்ன?

ஈரானைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவது மட்டுமே ஈரானின் அதிபர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பணி.

மற்றப்படி, அனைத்து அதிகாரங்களும் ஈரானின் உச்ச தலைவர் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடமே (IRGC) இருக்கும்.

இப்போது தங்கள் தேசத்தின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் கட்டுப்பாடு ஈரான் அதிபர் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சி தலைவருக்குமே இல்லை.

வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதலை நிறுத்துவது முழுக்க முழுக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையின் முடிவு.

அந்தத் தலைமை நினைத்தால் தான் இந்தத் தாக்குதல் நிற்கும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

போர்களில் கொல்லப்படும் குழந்தைகள்… உறங்குகிறதா உலகின் மனசாட்சி?

உலகில் நடக்கும் ஒவ்வொரு போரும் குழந்தைகளுக்கு எதிரான போர்தான். தற்போது அமெரிக்காவும்...

ஈரோடு: 'குலுக்கல் முறையில் தங்கக் காசு' – கூட்டம் சேர்க்க புது ஐடியா; பேசுபொருளாகும் இபிஎஸ் பிரசாரம்

'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற‌ பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர்...

புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு; எதிர்க்கும் ட்ரம்ப்… தீவிரமடையும் போர்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் 10வது நாளை...