15
March, 2025

A News 365Times Venture

15
Saturday
March, 2025

A News 365Times Venture

“லண்டன் சென்றபோது இந்தி பேசினாரா, ஆங்கிலம் பேசினாரா?'' – அண்ணாமலையை சாடும் செந்தில் பாலாஜி

Date:

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை நகர தி.மு.க சார்பில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க கரூர் மாவட்ட செயலாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை ஏற்று பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,

“தமிழ்நாட்டின் அரசியல் கோமாளி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் அவர் லண்டனுக்கு படிப்பிற்காக சென்றபோது இந்தி பேசினாரா அல்லது ஆங்கிலம் பேசினாரா என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். அவர் காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, இரவு ஒரு பேச்சு என்று பேசுவதோடு, அப்படி தான் பேசிய பேச்சினை கூட அடுத்த நாள் மறந்து பேசக் கூடியவர். தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். ஆனால், தான் கூறிய திட்டம் ஒன்று அதை செயல்படுத்துவது ஒன்று என்று மாறி மாறி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்திய நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய கூட்டம் பா.ஜ.க அரசு.

dmk public meeting

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றினை காப்பி அடித்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அந்த திட்டத்தினை செயல்படுத்துவதாக கூறி மக்களிடம் வாக்குகளை பெறுகிறார்கள். இந்தியா மட்டுமல்ல, உலகத்திற்கே பல்வேறு திட்டங்களை எடுத்துக்காட்டாக செயல்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர்” என்றார்.

அதனைத்தொடர்ந்து, தலைமை செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா பேசுகையில்,

“பி.ஜே.பி அரசு மறைமுகமாக விஸ்வகர்மா என்ற குலத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கையை தயாரிக்கிறது. கல்வி நிதியாக அளிக்க வேண்டிய தொகையை பிரதமர் அப்பா வீட்டின் பணத்தினையோ, நிர்மலா சீதாராமனின் மாமனார் வீட்டின் பணத்தினையும், தர்மேந்திர பிரதானின் வீட்டின் பணத்தினையும் கேட்கவில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவரும் செலுத்திய ஜி.எஸ்.டி வரியை உங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு உருப்படாத உத்திரபிரதேச மாநிலத்திற்கு அதிக தொகையை அளிக்கிறீர்கள். நாங்கள் உங்களிடம் எங்களது உரிமையை தான் கேட்கிறோம். தமிழன் என்றும் உங்களிடம் பிச்சை கேட்க மாட்டான்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வெளிநாட்டிலிருந்து நிவாரண நிதி: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை – உறுதி செய்த உயர் நீதிமன்றம்

வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள்...

தொகுதி மறுவரையறை: `தெற்கு தேய்கிறது; வடக்கு மேய்கிறது’ – ஆதவன் தீட்சண்யா | களம் பகுதி 4

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள்...

“புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' – கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்… பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாநகர தி.மு.க செயலாளராக இருந்த அமைச்சர் ஆ.செந்தில் கடந்த சில...

TN Budget Highlights | TASMAC – செந்தில் பாலாஜிக்கு சுத்துப்போடும் ED – Imperfect Show 14.03.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை: ரூபாய்...