18
February, 2026

A News 365Times Venture

18
Wednesday
February, 2026

A News 365Times Venture

'போர் முடிவுக்கு வர அமெரிக்கா முக்கியம்…' – வெள்ளை கொடியைப் பறக்க விடும் ஜெலன்ஸ்கி!

Date:

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு படுதோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று பல்வேறு மக்களுக்கு, ‘அடுத்து அமெரிக்கா உடனான உக்ரைன் உறவு என்ன ஆகும்?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

நான் உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் அமெரிக்காவில் இருக்கும் அவர்களது சக ஊழியர்களை தொடர்பு கொள்ளுமாறும், அவர்களிடம் இருந்து அலுவல் தகவல்களை பெறுமாறும் கேட்டுள்ளேன்.

உக்ரைனுக்கும், அமெரிக்காவிற்கு இடையே மரியாதையான பேச்சுவார்தை நடக்க வேண்டும். ஒருவருக்கு மற்றொருவரின் நிலைப்பாடு தெரிய வேண்டும். முக்கியமாக, முழுப்போரில் மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

போர் முடிவுக்கு வர அமெரிக்கா முக்கியம்…

இது 2022-ம் ஆண்டு அல்ல. நாம் மிக பலமாக இப்போது உள்ளோம். நம்மால் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

ஆனால், இந்தப் போரை நிறுத்த அமெரிக்காவுடனான உறவு மிக முக்கியம். யாருக்குமே முடிவில்லா போர் வேண்டாம். ஐரோப்பாவில் இருக்கும் அனைவரும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை கேட்கிறோம்.

பேச்சுவார்த்தைக்கு பதிலாக வெள்ளை மாளிகையில் நடந்த விஷயத்திற்கு வருந்த மட்டும் தான் முடியும். எப்படி நாம் எப்போதும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அனைத்து கூட்டாளிகளையும் மதிக்கிறோமோ அப்படி ஒருவர் மீது ஒருவர் அமெரிக்கா மற்றும் உக்ரைன் மரியாதை கொள்ள வேண்டும். அடுத்ததாக அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

உக்ரைன் சம்பந்தமாக ரஷ்யா தங்களது நிலைபாட்டையும், டிமாண்டையும் இன்னும் மாற்றவில்லை என்பது நன்கு தெரியும். ஆனால், உக்ரைனுக்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்கும் வரை, நம்மை யாராலும் வெற்றி கொள்ள முடியாது” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?

வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம்...

ராகுலா, பிரியங்காவா? – கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு...

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் – என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான...

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' – 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில்...