அரசு ஒப்பந்ததாரரிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்ற பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிரஹட்டி தொகுதி எம்எல்ஏ-வான பாஜக-வைச் சேர்ந்த சந்துரு லமானி, அரசின் சிறுபாசனத்துறை மூலம் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சாலை தடுப்புச் சுவர் கட்டும் ஒப்பந்தத்தை பெற்றுத் தர ஒப்பந்ததாரரான விஜய் பூஜார் என்பவரிடம் கட்டாயப்படுத்தி 12 சதவிகிதம் கமிஷன் கேட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து லட்சுமேஸ்வரில் உள்ள தனக்குச் சொந்தமான மருத்துவமனைக்கு லஞ்சப் பணத்தைக் கொண்டு வர எம்எல்ஏ சொன்னதால் அங்கு வைத்து ரூ. 5 லட்சத்தை ஒப்பந்ததாரர் கொடுக்க, அதை சந்துரு லமானியும் அவரது உதவியாளர்களும் சேர்ந்து வாங்கும்போது மறைந்திருந்த லோக் ஆயுக்தா காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இந்த நடவடிக்கையின்போது எம்எல்ஏ-வின் உதவியாளர்களில் ஒருவர், லஞ்சப் பணத்தில் ஐம்பதாயிரத்தை பக்கத்திலிருந்த வளாகத்திற்குள் தூக்கி எறிந்துவிட்டு தப்பிக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கர்நாடக மாநில பாஜக தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், கைதைக் கண்டித்து எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து லட்சுமேஸ்வரில் உள்ள தனக்குச் சொந்தமான மருத்துவமனைக்கு லஞ்ச பணத்தைக் கொண்டு வர எம்எல்ஏ சொன்னதால் அங்கு வைத்து ரூ. 5 லட்சத்தை ஒப்பந்ததாரர் கொடுக்க, அதை சந்துரு லமானியும் அவரது உதவியாளர்களும் சேர்ந்து வாங்கும்போது மறைந்திருந்த லோக் ஆயுக்தா காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இந்த நடவடிக்கையின்போது எம்எல்ஏ-வின் உதவியாளர்களில் ஒருவர், லஞ்சப் பணத்தில் ஐம்பதாயிரத்தை பக்கத்திலிருந்த வளாகத்திற்குள் தூக்கி எறிந்துவிட்டு தப்பிக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கர்நாடக மாநில பாஜக தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், கைதைக் கண்டித்து எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர்.




