30
June, 2026

A News 365Times Venture

30
Tuesday
June, 2026

A News 365Times Venture

புதுக்கோட்டை: தனியார் மதுபான ஆலையில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை

Date:

தமிழக முழுவதும் அமலாக்கத் துறையினர் மதுபான ஆலை மற்றும் முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவடடத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் 20 – க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை ஊராட்சியில் இயங்கி வரும் கால்ஸ் என்ற பெயரிலான தனியார் மதுபான ஆலையில் இன்று காலை 11 மணியளவில் இரண்டு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலை உள்ளே சென்று மதுபான இருப்பு விவரம் மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டனர்.

சோதனை

இதனால், இந்த ஆலையில் பணி முடிந்து செல்லும் தொழிலாளர்கள் காலதாமதமாக சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தனர். மேலும், இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு லாரியில் ஏற்றப்பட்ட மதுபானப் பெட்டிகள் வெளியில் வர அனுமதிக்கவில்லை என்றும் வெளியே இருந்து உள்ளே வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கவில்லை எனவும் சொல்லபப்டுகிறது. இந்த திடீர் சோதனையால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பேச்சை காங்., கேட்டிருந்தால் இந்நேரம்…" – விஸ்வநாதன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் எம்.பி. மாணிக்கம்...

ஆந்திர மாணவி தவறவிட்ட சான்றிதழ்கள்; உதவிய ஏஐ; நூறு பஸ்களில் சோதனை நடத்தி கண்டுபிடித்த கேரள போலீஸ்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜாஷ்னவி என்ற 17 வயது மாணவி, எல்.எல்.பி...

"பண மதிப்பிழப்பு நாயகர், நிதி அமைச்சரானால் இந்தியப் பொருளாதாரம் என்ன ஆகுமோ?" – ரவிக்குமார் MP

மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியனின் ராஜினாமாவிற்குப் பிறகு, மத்திய அமைச்சரவை மாற்றம்...

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர் – உடனே ஏற்றுக்கொண்ட சபாநாயகர்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது....