16
June, 2026

A News 365Times Venture

16
Tuesday
June, 2026

A News 365Times Venture

புதுக்கோட்டை: தனியார் மதுபான ஆலையில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை

Date:

தமிழக முழுவதும் அமலாக்கத் துறையினர் மதுபான ஆலை மற்றும் முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவடடத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் 20 – க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை ஊராட்சியில் இயங்கி வரும் கால்ஸ் என்ற பெயரிலான தனியார் மதுபான ஆலையில் இன்று காலை 11 மணியளவில் இரண்டு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலை உள்ளே சென்று மதுபான இருப்பு விவரம் மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டனர்.

சோதனை

இதனால், இந்த ஆலையில் பணி முடிந்து செல்லும் தொழிலாளர்கள் காலதாமதமாக சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தனர். மேலும், இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு லாரியில் ஏற்றப்பட்ட மதுபானப் பெட்டிகள் வெளியில் வர அனுமதிக்கவில்லை என்றும் வெளியே இருந்து உள்ளே வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கவில்லை எனவும் சொல்லபப்டுகிறது. இந்த திடீர் சோதனையால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மண்ணை மலடாக்க துடிக்கிறார்கள்!' – ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் கொதிக்கும் கடலூர் மக்கள்

கடல் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டம்கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து...

பிரியதர்ஷினி: கேரளத்தில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் தொடக்கம்; அமைச்சர் தலையில் கொட்டிய பாயசம்

கேரள மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பஸ் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும்...

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்; ரூ.95,000 கோடியைத் திருப்பித் தருகிறது அமெரிக்க அரசு!

இந்திய ஏற்றுமதியாளர்கள் செலுத்திய கூடுதல் சுங்க வரியான ரூ.95 ஆயிரம் கோடியைத்...

திமுக ரூட்டில் தவெக… மாற்றுக் கட்சியினரை அதிகளவில் இணைக்கும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

மதுரை, தேனி, மாவட்டங்களில் த.வெ.க. சார்பில் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் விழா கடந்த...