14
February, 2026

A News 365Times Venture

14
Saturday
February, 2026

A News 365Times Venture

"நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்"- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

Date:

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக – காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே மதுரையில் நேற்று (பிப்.13) திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆட்சியில் பங்கு கிடையாது என காங்கிரஸுக்கு மீண்டும் தெரிவித்திருந்தார்.

ராஜகண்ணப்பன்

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “நாங்கள் காங்கிரஸிடம் நிலைமையை சொல்கிறோம்.

நாம் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தான் நல்லது என்று சொல்கிறோம். அவ்வளவு தான் சொல்கிறோமே தவிர கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை.

அதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. ஆட்சியில் பங்கு கிடையாது என்று முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார்.

93 இடம் தான் கலைஞர் வைத்திருந்தார், ஆனால் அப்போது ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி இப்போது கொடுக்க முடியும்.

150-ல் இருந்து 160 தொகுதியில் உதயசூரியன் ஜெயிக்கும். நீங்கள் பாருங்கள். 170 தொகுதியில் நிப்போம், 150 தொகுதியில் இருந்து 160 தொகுதி வரை ஜெயிப்போம். உதயசூரியன் ஜெயிக்கும்” என்று பேசியிருந்தார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” 2021-ல் 173 -ல் போட்டியிட்டு 133 வெற்றி.. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில் 40 இடங்களை கேட்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான்' திமுக மாவட்ட செயலாளரின் வாக்குறுதி; குழப்பத்தில் நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள...

ஏழைகளின் இறைச்சி முதல் தீபாவளி பருப்பு வரை! – புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் டாப் 6 பருப்புகள்

உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள்,...

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்…' – அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது...

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு  கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில்...