25
March, 2026

A News 365Times Venture

25
Wednesday
March, 2026

A News 365Times Venture

'தவெகவும் பாஜகவும் ஒண்ணு..!' – திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

Date:

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபலமானார்.

வைஷ்ணவி

ஆனால், கட்சியில் தான் உள்பட எந்தப் பெண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று கூறி வைஷ்ணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தவெகவில் இருந்து விலகினார். அவருக்கு பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அழைப்பு சென்றது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் வைஷ்ணவி இன்று மாலை திமுகவில் இணைந்தார். கோவை கொடிசியா பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வைஷ்ணவி

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைஷ்ணவி, “இளைஞர்களை ஊக்குவிப்பார்கள் என்பதால் தவெகவில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றினேன். ஆனால், அங்கு அப்படி நடக்கவில்லை.

ஏராளமான இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிருப்தி தான் மிஞ்சியது. பாஜகவின் மற்றொரு முகமாக தான் தவெக உள்ளது. இனி என் மக்கள் பணி திமுகவில் தொடரும். “என்றார். வைஷ்ணவியுடன் மேலும் சில இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.

வைஷ்ணவி

இந்த நிகழ்வில் கோவை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். வைஷ்ணவி திமுக குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரின் அம்மா திமுக கவுண்டம்பாளையம் பகுதி மகளிரணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டு ஜீவிதா நாச்சியார் – சசிகலா வேட்பாளர்கள் லிஸ்ட்டில் இவர்களா?

தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன்...

'தொடர்ந்து தோற்பவன் என கேலி செய்வது இதயத்தை நொறுக்குகிறது' மேடையில் கண்ணீர்விட்ட காங்கிரஸ் வேட்பாளர்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் சட்டமன்ற தொகுதி கடந்த...

'என் மகனுக்கு இல்லை என்றால் எனக்கு..!'-கணக்கு போடும் திருநாவுக்கரசர்; கல்தா கொடுக்கிறதா கட்சி தலைமை?

அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மாநில தலைவராகவும் இருந்தவர் திருநாவுக்கரசர். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக இருந்த இவருக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தொகுதியில் இவரது மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். அங்குள்ள தி.மு.க-வினர், 'இந்தமுறை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும்' என்று போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு ஒதுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் ஆதரவாளரான மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தீர்மானம் போட்டு, தலைமைக்கு அனுப்பியிருக்கிறார்."காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்போம். ஆனால், நான் திருச்சி கிழக்கு தொகுதியை கேட்கிறேன் என்பது தவறான தகவல். நான்தான் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டேனே. என் மகன்தான் அறந்தாங்கி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கிறது. அது முடிந்ததும், தெரியும். ஏன் அவருக்கு கிடைக்காமல் போக போகிறது?. என்னைப் பொறுத்தவரையில் நான் நிற்கவில்லை" என்றார்.திருநாவுக்கரசரின் சீட் பெறும் 'ஆடுபுலி ஆட்டம்' என்னவாக போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்! Source link

திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக?

கூட்டணியில் இழுபறியாக நீடித்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும்...