15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல்: "தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும்" – தேர்தல் ஆணையம்

Date:

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

இது தொடர்பாக டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 4:00 மணியளவில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் முழுமையான கால அட்டவணையை வெளியிடுவார்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களிலும் ‘தேர்தல் நடத்தை விதிகள்’ (Model Code of Conduct) அமலுக்கு வரும்.

Gyanesh Kumar – தலைமை தேர்தல் ஆணையர்

இதன் மூலம் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ, அரசாணைகளை வெளியிடவோ முடியாது. அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வரும்.

தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, பதற்றமான தொகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினரை நிறுத்துவது குறித்தும் இன்று அறிவிப்பு வெளியாகலாம். மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகளை அரசியல் கட்சிகள் இப்போதே இறுதி செய்யத் தொடங்கியுள்ளன. மாலை 4 மணிக்குப் பிறகு அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Assembly Elections: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!- முழு விவரம்

தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை...

"பாஜக-வின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் சூன்யமாகிவிடும்" – திருமாவளவன் எச்சரிக்கை

எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக்...

'பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்?' – திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது விஜிலென்ஸ் FIR

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணி பேரூராட்சி திமுக சேர்மன்...

"உயிருடன் இருந்தால் விடமாட்டோம்" – நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான்...