2
March, 2026

A News 365Times Venture

2
Monday
March, 2026

A News 365Times Venture

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

Date:

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் இன்று முதல் இச்சேவைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்த ரயிலில் மொத்தமாக 12 பெட்டிகளில் ஏசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஏசி வசதியுடன் கூடிய இந்த ரயில், அதிகாலை 5:45 மணிக்கு தாம்பரம் பணிமனையிலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரையை வந்தடைந்து, 7 மணிக்கு இங்கிருக்குந்து புறப்பட்டு 8:45 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

மேலும், பிற்பகல் 3:45 மணிக்கும், இரவு 7:35 மணிக்கும் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இந்த ஏசி ரயில் புறப்படும்.

அதேபோல், மறுமுனையில் செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கும், மாலை 5:45 மணிக்கு சென்னை கடற்கரையை நோக்கி இந்த ஏசி ரயில் புறப்படும்.

இந்த ரயில், வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது.

மேலும், இந்த ஏசி ரயிலில் அதிகபட்ச கட்டணமாக சென்னை கடற்கரை டு செங்கல்பட்டுக்கு வரை ரூ. 105 வசூலிக்கப்படும். தாம்பரம் டு செங்கல்பட்டு ரூ. 85-ம், தாம்பரம் டு எழும்பூர் ரூ. 60-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35 ஆகும்.

இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் இந்த ஏசி புறநகர் ரயில் சேவையில் கட்டணங்கள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி...

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங்...

ஈரான் : காமேனி மரணம் – மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின்...

நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! – என்ன செய்யப் போகிறது திமுக?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை....