14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

`சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ்' – 3 யூடியூப்பர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

Date:

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ரீல்ஸ் எடுப்பதாக கூறி, 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோபதிவு செய்த புகாரில் தஞ்சாவூரை சேர்ந்த யூடியூப்பர் திவ்யா(வயது 36), ஈரோட்டை சேர்ந்த கீழக்கரை என்ற கார்த்திக்(30), கடலூரை சேர்ந்த சித்ரா(48), ஆனந்தராமன்(24) ஆகிய 4 பேர் மீது ஜனவரி 29-ம் தேதி போக்சோ வழக்குப்பதிவு செய்து, ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் ஜாமின் மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. நாளையுடன் (மார்ச் 12) நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது ஏற்கெனவே பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க விருதுநகர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் திவ்யா, சித்ரா, கார்த்திக் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், 3 பேரும் நேற்று குண்டர்‌சட்டத்தின்‌ கீழ் கைது செய்யப்பட்டனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக அரசு | முழு விவரம்

Immigrants எனப்படும் குடியேறிகள் தொடர்பாக மத்திய அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில்...

”இந்தி ஈஸியான மொழி; இந்தி தெரிந்தால் அனைத்து மாநிலங்களையும் தொடர்பு கொள்ளலாம்” – டி.டி.வி.தினகரன்

தஞ்சாவூரில் அ.ம.மு.க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட...

இந்தியாவில் முதல்முறை… TN BUDGET-ல் Twist வைத்த DMK Govt | Parliament | Imperfect Show

Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel Source link...

மதுரை: எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்; அனுமதித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்; பின்னணி என்ன?

எச்சில் இலையில் உருளுவது வழிபாட்டு முறையாக இருப்பினும், அது சுகாதாரத்திற்கும், மனித...