1
July, 2025

A News 365Times Venture

1
Tuesday
July, 2025

A News 365Times Venture

ஆபரேஷன் சிந்தூர்: சசி தரூர் தலைமையில் கனிமொழி உள்ளிட்ட எம்.பிகள் வெளிநாட்டு பயணம்; காரணம் என்ன?

Date:

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது இந்தியா.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்தப் பின், பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக நின்றது. தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்தது.

இந்த நிலையில், தற்போது மத்திய அரசு, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு அனுப்பி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்க உள்ளது. இதில் ஐக்கிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் அடங்கும்.

மத்திய அரசின் அறிவிப்பு

யார் யார் செல்கிறார்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றதும் பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இந்தத் திட்டத்திற்கு அனுப்பப்போவதில்லை. இதில் அனைத்து கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதன் படி, இந்தத் திட்டத்தில் மூலம் கூட்டாளி நாடுகளுக்கு செல்லப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

1. சசி தரூர், காங்கிரஸ்

2. ரவி சங்கர் பிரசாத், பாஜக

3. சஞ்சய் குமார் ஜா, ஜனதா தளம்

4. பைஜயந்த் பாண்டா, பாஜக

5. கனிமொழி கருணாநிதி, திமுக

6. சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ்

7. ஶ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவ சேனா

இந்தக் குழுவிற்கு சசி தரூர் தலைமை தாங்க உள்ளார்.

எப்போது செல்வார்கள்?

இவர்கள் இந்த மாத இறுதியில் குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்கள். இது கிட்டதட்ட 10 நாள் பயணமாக இருக்கும்.

என்ன செய்வார்கள்?

இவர்கள் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு சென்று இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்குவார்கள். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர்கள் அந்த நாடுகளில் எடுத்துரைப்பார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...