13
April, 2026

A News 365Times Venture

13
Monday
April, 2026

A News 365Times Venture

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: 21 மணி நேரம் நடந்தும் கைக்கூடாதது ஏன்? Quick Points

Date:

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எட்டும் என்று உலகமே நினைத்திருந்தது.

ஆனால், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்துள்ளது.

21 மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தும், ஏன் நல்ல முடிவு எட்டப்படவில்லை?

காலிபாஃப் – ஷெபாஸ் ஷெரீப்

> ஆரம்பத்தில் இருந்தே ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.

2025-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்கா ஈரானைத் தாக்கிய போது கூட, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு பகுதிகளைத்தான் குறி வைத்தது.

இப்போதும் போர் தொடங்கியதற்கு இதுவே காரணம்.

நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ஜே.டி.வான்ஸ் இதை முன்னெடுத்தபோது, இதற்கு ஈரான் தயாராக இல்லை.

> ஹார்முஸ் ஜலசந்தி தங்களிடம் இருக்க வேண்டும் என்றும், அந்தப் பாதையைக் கடக்க ஈரானுக்கு கப்பல்கள் சுங்க வரி கட்ட வேண்டும் என்றும் ஈரான் கூறியிருக்கிறது. ஆனால், அமெரிக்கா இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

> அமெரிக்கா முடக்கி வைத்திருக்கும்‌ ஈரான் சொத்துகளை உடனடியாக விடுவிக்கப்படும் என்று பேசப்பட்டிருக்கிறது. இதற்கு அமெரிக்கா ஒத்துக்கொள்ளவில்லை.

> லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கும் அமெரிக்கா ஒத்துக்கொள்ளவில்லை.

ஆக, பரஸ்பர எந்தக் கோரிக்கைக்கும் இரு நாடுகளும் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான், பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'துருக்கியின் அழகான பெண் எனக்கு மனைவியாக வேண்டும்' – வரம்பு மீறிய உகாண்டா அதிபர் மகன்

துருக்கி மற்றும் உகாண்டா உறவில் தற்போது விரிசல் விழுந்திருக்கிறது. இதையொட்டி துருக்கி...

‘டோக்கன் என்றால் செந்தில் பாலாஜி, செந்தில் பாலாஜி என்றால் டோக்கன்’– அதிமுக அம்மன் அர்ச்சுணன் சாடல்

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்...

மேடையில் மயங்கி விழுந்த ராமதாஸ்; "அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் சும்மா விடமாட்டேன்"- அன்புமணி ஆவேசம்

தேர்தல் பரப்புரைக்காக சேலம் வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மயங்கி...